Thursday, January 21, 2010

நேரம்...காலம்


சில நேரங்களில் வரும் சிறு கஷ்டங்கள் கூட நமக்கு பெரும் துயரம் போல தெரிகிறது. கஷ்டம் வரும் நேரங்களில் இந்த உலகம் நமக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தி விட்டது போலவும் , சந்தோஷம் வரும் நேரத்தில் நாம் அதற்காக பெரிதும் முயற்சித்து அது நமக்கு கிடைத்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லாதது போலவும் தோன்றுகிறது. நம்மால் நினைத்தது எதையும் செய்திட முடியும் என இறுமாப்பு நிலைக்கு மீண்டும் மீண்டும் நம்மை இட்டுச் செல்வதே காலத்தின் பெரிய மாயை எனப்படுகிறது.

If a man is offered a fact which goes against his instincts, he will scrutinize it closely, and unless the evidence is overwhelming, he will refuse to believe it. If, on the other hand, he is offered something which affords a reason for acting in accordance to his instincts, he will accept it even on the slightest evidence.
-Bertrand Russell

கஷ்டப்படும் நேரங்களில் மட்டுமே சரணாகதி என்ற மனநிலைக்கு நம் மனம் முயல்கிறது. நமது நிலைமை சற்றே தெளிந்த பிறகு நமது மனம் மீண்டும் வேதாளமாகி ஒரு அகங்கார நிலைக்கு சென்றுவிடுவதை கூர்ந்து கவனிக்கும் போது, ஆண்டவா என்னை எப்பொழுதுமே உன்னுடைய அருளினால் தாங்க கூடிய கஷ்ட நிலையில் வைத்து இருப்பாயாக என வேண்டுவதே சரி எனப்படுகிறது. சவலை பிள்ளையின் மேலே அதிக பாசத்தை வைத்து இருக்கும் தாயை போல தன்னிடம் முழுமையான சரணாகதியை நாடும் எளிதான மனிதர்களின் மேலேயே இறைவன் கருணை கொள்கிறான்.

When financial stability is assured, spiritual bankruptcy is also assured.

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில் காலத்தை தன்னுடைய பெரும் படைப்பாக பிரகடனப்படுத்துகிறார். சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment