நெஞ்சு படபடக்கிறது
நீர் வீழ்ச்சி என்று
அருவியை யாரவது சொல்லிவிட்டால்
-விக்ரமாதித்யன்
அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலை மீது நின்றது ஒரு புல்
-தேவதேவன்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது
-பிரமிள்
Thursday, January 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment