Thursday, January 14, 2010

காலத்தினாலான உதவி ...



இரண்டொரு நாட்களுக்கு முன் ஹைதியில் நடந்த பூகம்பத்தினால் ஏற்கனவே வறுமையான சூழ்நிலையில் வாழும் அந்நாட்டு மக்கள் இப்பொழுது மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு, தற்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக நம்மால் மிகவும் சுலபமாக ஒரு நொடியில் உதவி செய்திட இயலும். இந்த நேரத்தில் நம்மால் இயன்ற உதவி சிறிதாக இருந்தாலும், பல்லாயிரம் மக்களின் கூட்டு முயற்சியினால் அது பெரு வெள்ளமாக மாறி மிக்க நன்றி பயக்கும்.

http://www.google.com/relief/haitiearthquake/

உதவி செய்ய பல ஊடகங்கள் இருப்பினும், இங்கே கொடுத்துள்ள சுட்டியின் மூலமாக மிகவும் எளிதாக நம்மால் இயன்ற உதவியை சடுதியில் செய்திட முடியும். வள்ளுவன் வாக்கின் படி

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது .

No comments:

Post a Comment