Sunday, March 7, 2010

இரு பாடல்கள்

மனதிற்கு மிகவும் இனிமையான, ஆனால் அதே நேரத்தில் தரத்தில் மிக சிறந்ததும், காலத்தால் அழியாததுமான இரண்டு தமிழ் திரைப்பட பாடல்கள்.

ஒன்று, தமிழ் திரையுலகின் முதல் நட்சத்திரம் - எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களால் இன்றைய நிலையிலும் மிகவும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் வருவது.
httphttp://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA&feature=related

மிகவும் இனிமையான இசை, மிகவும் சுத்தமான உச்சரிப்பு, பிசிறில்லாத குரல், திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் பாடல் வரிகள், பாகவதர் அவர்களின் rendition, இவை எல்லாம் சேர்ந்து, இந்தப் பாடல் கேட்பவர்களுக்கு ஒரு மிக சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

இரண்டு. குடத்திலிட்ட விளக்காக அவ்வளவு பரவலாக அறியப்படாதவர் ஆனால் இசை ஞானத்தில் சற்றும் குறைவில்லாத தமிழ் இசை ஆர்வலர் திரு. ம.ம. தண்டபாணி தேசிகர் அவர்கள் நந்தனார் திரைப்படத்தில், திரு. கோபால கிருஷ்ணா பாரதியார் அவர்களால் ஹரி கதை வடிவத்தில் இயற்றப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்று இருந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=PMHNk9pxgec&feature=related

இந்த பாடலில் நந்தனாரின் பிராமண எஜமானராக வருவது புகழ் பெற்ற நடிகர் திரு.செருக்களத்தூர் சாமா அவர்கள். புன்னாகவராளி ராகத்தில் அமைந்த இந்த பாடலை கேட்கும் பொழுது மகுடிக்கு மயங்கிய சர்ப்பம் போன்ற உணர்வு ஏற்படுவது இயல்பு.

என்ஜாய்!

No comments:

Post a Comment