Monday, May 4, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 3



ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் - ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் - ஸ்ரீமத் ஸபாநாயஹீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்.



தேவியின் அளவற்ற ஆற்றலையும் அதிசியத்தையும் போற்றிய ஆச்சர்யாளின் பக்தியையும் ஞானத்தயும் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ள நான் இந்த காரியம் எவ்வளவு கடினமானது என்பதை இப்பொழுது உணர்ந்துகொள்கிறேன். ஆச்சர்யாள் தேவியின் சௌந்தர்யத்தை மந்த்ர ஸ்வரூபமாய் வருணிக்கிறார். ஆச்சர்யாளின் அநுக்ரகத்தையும் தேவியின் கருணையையும் மட்டுமே நம்பி இந்த ஸ்லோகத்திற்கு என்னால் இயன்ற அளவிற்கு பதப்பொருளை தருகிறேன்.

ஸ்ரீ வித்யாம் ஸிவவாம பாக நிலையாம் -- வித்யா ஸ்வரூபமாகவும், ஈசனின் இடது பாகத்தையும் அலங்கரித்து காட்சியளிக்கிறாள்

ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம் - ஹ்ரீம் என்னும் மந்திரத்தை ஆட்கொண்டு பிரகாசிக்கிறாள்

ஹ்ரீம் என்னும் மந்திரத்துக்கு ஆழ்ந்த பொருள் விளக்கம் உள்ளது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் ஜகத் ஜனனியின் சக்தியை குறிக்கும் மந்திரமாக இது கூறப்படுகிறது.

ஸ்ரீ சக்ராங்கித பிந்துமத்ய வசதீம் -

ஸ்ரீ சக்ராங்கித - ஸ்ரீ சக்ரத்தின் , பிந்து - துளி , வசதீம் - வாசம் செய்பவள்

காஞ்சி பெரியவாளுடைய தெய்வத்தின் குரல் ஆறாம் பாகத்தில் சௌந்த்ர்யலஹரி ஸ்தோத்திரத்திர்க்கு அருளுரை கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அதனை படித்து இந்த மந்த்ரங்களுக்கு பெரியவாளுடைய கருத்துகளை பதிவு செய்கிறேன்.

The true understanding of the form of manthras is beyond my means . In my opinion, it could be realized under the guidance of the guru and aathma sadhana, not by pedantic undertaking.

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் - ஸ்ரீ ஷண்முக பெருமானுக்கும், ஸ்ரீ விக்னேஸ்வர பெருமானுக்கும் தாயானவள்

ஸ்ரீமத் ஜகாந்மோஹிநீம் --- இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டியையும் மாயையையும் ஆட்கொண்டு ஜகன் மோகினியாகவும் திகழ்கிறாள்.

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

மந்திர ஸ்வரூபமாக தாயாரை வருணிக்கும் ஆச்சர்யாளின் ஞானத்தை புரிந்து கொள்ளும் தகுதி எனக்கு இல்லை. குருவின் பூரண அனுக்ரஹத்தை பெற்று கொண்டு இதன் தத்வார்த்த சாதனத்தை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே !

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ

Saturday, May 2, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 2



முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் -பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - பத்மபிரபா பாசுராம்
ஸர்வாபீஷ்டபலப்ரதாம் கிரிஸுதாம் -- வாணி ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் !!

முக்தாஹார லஸத்கிரீட ருசிராம் - நல்முத்தினாலான மாலையையும், கிரீடத்தையும் அணிந்து காட்சி அளிப்பவள்

பூர்ணேந்து - பூரண சந்திரன், வக்த்ர - திருமுகம், ப்ரபாம் - பிரகாசம்

பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம் - தாயாரின் திருமுகம் பூரண சந்திரனை போன்ற பிரகாசமான சாந்தத்தை பொழிகின்றது.

நூபுரம் - சிலம்பை போன்ற அணிகலன், கிங்கீணீ - கால் சலங்கையில் பதிக்கப்பட்டு சிறிய ஒலியை எழுப்பும் கற்கள்/மணிகள்.

சிஞ்ஜ்ந்நுபூர கிங்கீணீம் மணிதராம் - சிஞ்சன ( நவ ரத்தினங்களை போன்ற ஒருவகையான மணி ) மணிகள் பொருந்தி பிரகாசிக்க கூடிய கால் சிலம்பை அணிந்து காட்சியளிப்பவள். ஒரு சிறிய இடைசெருகல் - திருமாலிருஞ்சோலை இல் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களில் உள்ள சிலம்பை போன்ற அணிகலனில் ( நூபுரம்) இருந்து தோன்றியதால் அது நூபுரகங்கை என்று அழைக்கப்படுகிறது.

பத்மபிரபா பாசுராம் - அன்றலர்ந்த செந்தமரைப்பூவை போன்று பிரகாசத்தை உடையவள்

ஸர்வாபீஷ்டபலப்ரதாம் - பக்தர்களின் எல்லா வேண்டுதல்களையும் நிறைவேற்றி அதன் பலனை தருபவள்

கிரிஸுதாம் - தாயாரின் பல நாமகரணங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று. மலையத்வஜ பாண்டியனின் மகள் - (ஸுதா) - கிரிஸுதா - ஹிமகிரிசுதா - கிரிஜா - என பல நாமகரணங்கள் தாயாரை குறிக்கின்றன. இந்த சொற்பதருக்கு பல விதங்களில் பொருள் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அந்த தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

அபிராம பட்டர்பிரான், அந்தாதியில் அழகுடன் மலை மகளே என்று வருணிக்கிறார்.

வாணி - கலைமகள், சரஸ்வதி, ரமா - லக்ஷ்மி தேவி - ஸேவிதாம் - ஸேவிக்கப்படுபவள்.

வாணி ரமாஸேவிதாம் - சரஸ்வதி-லக்ஷ்மி தேவியரால் ஸேவிக்கப்படுபவள்.

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

முந்தைய பதிவில் தெரிவித்தபடி, மேற்கண்ட பதிவில் என் அறிவிற்கு எட்டியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருளி, பின்னூட்டங்களில் தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்

அடியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

மாத்ரு தேவோ பவ !! பித்ரு தேவோ பவ!! ஆச்சர்ய தேவோ பவ !!