Sunday, February 7, 2010

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 5



நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரபாம்
நானபுஷ்பப் விராஜிதந்க்ரியுகலாம் நாராயணே அர்ச்சிதாம்
நாதப்ரம்மயீம் பராத்பரதராம் நாநார்த்ததத்வார்த்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்

மிகச்சிறந்த முனிவர்கள் மற்றும் யோகிகளின் ஹ்ருதயத்தில் நிறைந்து இருப்பவள் , பலவிதமான ஸித்திகளை அருளிச் செய்பவள் , பற்பல புஷ்பங்களால் திருவடியில் பூஜிக்கபடுபவள், ஸ்ரீமன் நாராயணனின் போற்றுதலுக்குரிய சஹோதரியானவளும், தத்வ ஸ்வருபிணியுமானவளும், நாதப்ரஹ்மாமயமானவளும், ஸ்முத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

மதுரை மாநகர் குடிகொண்டிருக்கும் அம்மா, என்றும் நின் பாதங்கள் அடிபணிந்திட அருள் புரிவாய்.

தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே .

மாத்ரு தேவோ பவ , பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ