Sunday, July 26, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 4


ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஞானப்ப்ரபாம் நிர்மலாம்
ச்யாமபாம் கமலாஸநார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணாவேணு ம்ருதங்கவாத்யா ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்.

ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஞானப்ப்ரபாம் நிர்மலாம் --

மதுரையில் குடிகொண்டிருக்கும் சோமசுந்தரப்பெருமானுடைய இடப்பக்கத்தில் வீற்றிருக்கும் சுந்தரநாயகியானவள், பயத்தை சம்ஹாரம்செய்பவளுமாகவும், அப்பழுகற்றவளும், மெய்ஞானத்தை ப்ரகாஸிப்பவளுமாகவும் காட்சி தருகிறாள்.

ச்யாமபாம் கமலாஸநார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்--

கரிய திருமேனியுடன் காட்சி தரும் தேவி, ப்ரஹ்ம்மன் போற்றும் திருவடியுடயவள், மற்றும், ஸ்ரீமன் நாராயணனின் பாத்திரத்திற்குரிய ஸஹோதரி.
திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், தன் சௌஜன்யம் மிக்க ஸஹோதரிக்கு பக்கத்தில் இருப்பதில் எந்த விசித்திரமும் இல்லை தான் !

வீணாவேணு ம்ருதங்கவாத்யா ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம் --

வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம் முதலிய வாத்ய கானங்களை ரஸிப்பவளாகவும், பற்பல ஆடம்பரங்களையும் அணிந்து காட்சி அளிப்பவளும்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம்--

சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

கற்றாவின் மனம் போல கசிந்துருக வேண்டுவனே !

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ.